districts

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்

புதுச்சேரி, ஜூன் 17-  மின்கட்டண உயர்வை திரும்பப்பெறா விட்டால் மாநிலம்  முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று புதுச்சேரி  அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரசின்  மின்சாரத்துறை ஜூன் 16 முதல் கட்டண உயர்வை அறி வித்துள்ளது.

இது புதுச்சேரி மாநில ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் பகல் கொள்ளையாகும். வரி உயர்வு, அபராதம் என சாமானிய மக்க ளின் பணத்தை அட்டைப்பூச்சிகளை விட மோசமாக உறிந்து கொள்ளையடித்து ஊழலில் திளைத்துகொண்டிருக்கும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.  புதுச்சேரி மாநிலம் வேலைவாய்ப்பற்ற மாநிலமாக திகழ்கிறது.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, அரசுதுறை களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பவோ எந்த வித நடவடிக்கையும் இந்த அரசு மேற்கொள்ள வில்லை. நிரப்பப்பட்ட அரசு பணியிடங்கள் கூட ஆட்சியாளர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு  தான் நிரப்பியுள்ளார்கள்.

 ஏழை, எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மக்களின் பணத்தை உறிஞ்சி ஊழல் செய்யவே என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. லாபத்தில் இயங்கி வரும் மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க   முழு வீச்சில் செயல்பட்டு வரு கிறது. அதனை எதிர்த்து சிபிஎம் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் சமூக இயக்கங்களும் வலுவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை கட்டணத்தை உயர்த்தி தனியாருக்கு சாதகமான நிலைமையை உருவாக்க ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதனை சிபிஎம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக கூறுவதோடு,மின் கட்டண உயர்வை திரும்ப பெற விட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.