அறந்தாங்கி, ஜூன் 21 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி நகராட்சி அலுவலக வாயிலில் மாவட்ட உள்ளாட்சி துறை (சிஐடியு) தொழிலாளர் சங்க தூய்மைப் பணியா ளர்கள் வருங்கால வைப்பு நிதி தொகையை உடனே கட்ட வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பாக வெள்ளியன்று 2 ஆவது நாளாக குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு உள்ளாட்சித் துறை (சிஐடியு) மாவட்ட பொதுச் செய லாளர் க.முகமது அலி ஜின்னா தலைமை வகித்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் கோரிக் கைகளை விளக்கி பேசினார். சிஐடியு ஒருங்கிணைப்பாளர் ஆர்.கர்ணா, சிபிஎம் தாலுகா செயலாளர் நாரா யண மூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 154 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகை மற்றும் கூட்டுறவு சொசைட்டி பணத்தை உரிய நிறுவ னத்தில் கட்டவில்லை. அதனால் தொழி லாளிகள் கடன் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெற்ற கட னுக்கு கூட்டு வட்டி செலுத்த வேண்டி யுள்ளது. தூய்மைப் பணியை ஒப்பந்தத் தில் எடுத்துள்ள சென்னையில் உள்ள ராம் அன் கோ நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 2023 முதல் பணியாளர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை.
மேலும் மாதச் சம்பளம் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். சம்பளப் பட்டியலை அவரவர் பெயர்களில் வழங்க வேண்டும். இஎஸ்ஐ கார்டு மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். கையுறை உள்ளிட்ட பாது காப்பு உபகரணம், சீருடை வழங்க வேண்டும். அம்மா உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 2015 முதல் கட்ட வேண்டிய பிஎஃப் தொகையை உடனே செலுத்த வேண்டும். அனைத்து குப்பை வண்டி களையும் சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தீபாவளி பண்டிகை முன்பணம், குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நக ராட்சி அலுவலகம் முன்பு 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதில் திரளான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நகர்மன்றத் தலை வர் இரா.ஆனந்த் தலைமையில், வட்டாட் சியர் திருநாவுக்கரசு, காவல் துறை துணை கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் வேலை நிறுத்தம் செய்த தால் நகரில் இரண்டு நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற, சனிக்கிழமை பணிக்கு திரும்பு வது, அதனையடுத்து தூய்மைப் பணி யாளர்களின் நியாயமான கோரிக்கை மீது ஆர்டிஒ தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி, தீர்வு காண்பது என நகர்மன்றத் தலைவரும், அதிகாரி களும் உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது.