நாமக்கல், ஜூன் 7- எருமப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமபட்டி பேரூராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ச.உமா, அடிப்படை வசதி கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இம்முகாமில் 18 குடும் பங்களைச் சேர்ந்த 66 நபர்கள் வசித்து வருகின்றனர். இம் முகாமில் 8 வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை என முகாம் வாழ் மக்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில், மின்சார வாரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்திடுமாறு உத்தரவிட்டார். மேலும், தேவையான குடிநீர், மின்சாரம், ஆண், பெண் என தனித்தனி பொதுக்கழிப் பிடம், கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்ளன. இருந்தபோதி லும் கூடுதலாக மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் தனி நபர் கழிப்பிடம் தேவைப்ப டும் நபர்களுக்கு இட வசதிக்கு ஏற்ப கட்டித்தரவும், மேல் நிலை அல்லது கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும் எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட் டார்.