districts

வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கேபிஎன் பேருந்து நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், ஜூன் 6- பிரபல கேபிஎன் பேருந்து பார் சல் நிறுவனம், வாடிக்கையாள ருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் கணேசன் (54). சென்னையில் உள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக சைக் கிள் ஒன்றை பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பவதற்காக, சேலத்தை தலைமையிடமாக கொண்டு இயங் கும் பிரபல கேபிஎன் பார்சல் நிறு வனத்தின் பரமத்திவேலூர் கிளை யில் கடந்தாண்டு ஜூன் மாதத்தில்  ஒப்படைத்து, அதற்காக ரூ.520யை கட்டணமாக செலுத்தியுள்ளார். ஓரிரு நாளில் சைக்கிள் சென்னையில் உள்ள தங்கள் நிறுவன அலுவல கத்துக்கு சென்று விடும் என்றும்,  அங்கு சைக்கிளை பெற்றுக்கொள் ளலாம் என்றும் பார்சல் நிறுவனத் தினர் உறுதி அளித்தனர்.

ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும் சைக் கிளை பார்சல் நிறுவனம் வாக்கு றுதி அளித்தபடி, சென்னைக்கு கொண்டு சேர்க்கவில்லை. இது குறித்து பலமுறை கணேசன் கேட் டும், பரமத்திவேலூர் கிளை அலுவ லகத்திலும், பார்சல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் முறை யான பதில் சொல்லப்படவில்லை.

இதனால், சைக்கிளை பார்ச லில் அனுப்பிய கணேசன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், பார்சல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவ லகத்தின் மீது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ.ராமராஜ்,உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கி னர். அதில், பார்சல் நிறுவனமும், அதன் கிளை அலுவலகமும் ஒப்ப டைக்கப்பட்ட சைக்கிளை உரிய இடத்தில் வாக்குறுதி அளித்தபடி வழங்காததால் சேவை குறைபாடு புரிந்துள்ளனர்.

இத்தகைய சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல்  செய்தவருக்கு ஏற்பட்ட இழப்பு, மன  உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை நான்கு  வாரங்களுக்குள் பார்சல் நிறுவ னம் வழங்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது.