districts

img

நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தற்போது மானாவாரி பகுதியில் நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் பஞ்சநதிக்குளம், தென்னடார், வாய்மேடு, சிந்தாமணிகாடு, தகட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியாமலும், நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். மழை நின்ற பிறகு விவசாயப் பணியில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

;