districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி துவங்கியது

திருவள்ளூர், ஜூன் 7- திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி வெள்ளியன்று (ஜூன் 7),  வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சோழவரம் உள்வட்டத்திற்குப் பட்ட நல்லூர், ஜெகநாதபுரம் -12-3, ஆத்தூர், புதிய எருமை வெட்டி பாளையம், பழைய எருமை வெட்டிபாளை யம், காரனோடை, சோத்துப்பெரும்பேடு, ஆட்டந்தாங்கல்,விஜயநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.  

இதனை பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந்த் மனுக்களை பெற்று உடனடி விசாரணை நடத்தினார்.அவருடன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன்,சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்  பாபு, வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி, முதல் நிலை வருவாய் ஆய்வாளர் அன்புச் செல்வன்,ஆத்தூர் ஊராட்சி தலைவர் சர்குணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த ஜமாபந்தி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  

ஊத்துக்கோட்டை வட்டத்தில் ஜுன் 19 வரை யிலும், பூந்தமல்லியில் 18 ஆம் தேதி வரையிலும், ஆவடி வட்டத்தில் 14 ஆம் தேதி  வரையிலும், திருத்தணியில் 21 ஆம் தேதி வரையிலும், பள்ளிப்பட்டு வட்டத்தில் 13 ஆம்  தேதி வரையிலும், ஆர்.கே.பேட்டையில் 14 ஆம் தேதி வரையிலும், பொன்னேரி வட்டத்தில்  வரும் 28 ஆம்தேதி வரையிலும் மற்றும் கும்மிடிப்பூண்டியில் ஜுன் 19 ஆம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெற்ற உள்ளது. இதனை பொது  மக்கள் பயன்படுத்தி கொள்ள  வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.