districts

img

தனியார் பள்ளியில் வெடிகுண்டு புரளி

திருவள்ளூர், செப் 13- பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனியாருக்கு சொந்தமான வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் செவ்வாயன்று (செப் 13)  காலை வெடிகுண்டு இருப்பதாக ஒரு மிரட்டல் ஒன்று வந்திருக் கிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மாணவர்களை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள் உடனடியாக வர வழைக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாண வர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் காவல்துறையினர் பள்ளிக்கு வந்த னர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் வந்து பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதா என  தீவிர சோதனை நடத்தினர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் திடீரென வீட்டிற்கு அனுப்பப் பட்டதால் பெற்றோர்கள் குழம்பினர். நான்கு பள்ளிகளிலும் முழுமையான சோதனை நடத்திய பின்னர் இது புரளி என தெரியவந்தது.

;