திருப்பூர், ஜூன் 10- திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதி யில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோவி லுக்கு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், இஸ்லாமிய மக் கள் சீர்வரிசையோடு கலந்து கொண்ட சம்ப வம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தெற்கு முதலிபாளையம் பஞ்சா யத்து ஹவுஸிங் யூனிட் 11 ஆவது வார்டில் புதிதாக விநாயகர் கோயில் கட்டப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்வி ழாவை முன்னிட்டு அதே பகுதியில் உள்ள மேல் டாங்க் பள்ளிவாசல் தலைவர் சலீம் தலைமையில், 50 க்கும் மேற்பட்ட இஸ்லா மிய மக்கள் சீர்வரிசையோடு கும்பாபிஷேகத் தில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரி வித்தனர். கோவில் நிர்வாகத்தினர் இவர் களை வரவேற்று சிறப்பித்தனர். மதநல்லி ணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமி யர்கள் சீர்வரிசையோடு கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் வர வேற்பை பெற்றுள்ளது.