திருப்பூர், ஜூன் 11 - திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள் ளாட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி ஊதி யம் வழங்க கோரி செவ்வாய் அன்று சிஐடியு அறிவித்திருந்த ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்தம், தொழிலாளர் துறை பேச்சுவார்த்தையில் முன்னேற் றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒத்திவைக் கப்படுவதாக சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
சிஐடியூ தொடுத்த வழக் கில், நீதிமன்ற உத்தரவுப்படியும், அர சாணைப்படியும் ஊதிய உயர்வு, மற்றும் இ.பி.எப் பிடித்தம் முறைப்ப டுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் வேலை நிறுத்த அறிவிப்பும், ஜூன் 11 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய் யப் போவதாக சிஐடியு அறிவித்தி ருந்தது. இதன் பின்னணியில் தொழிலாளர் உதவி ஆணையர் ஜூன் 5 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரு முறை மாநக ராட்சி, நகராட்சி நிர்வாகங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் ஒரு வார காலத்தில் சிஐ டியு கோரிக்கைகள் குறித்து நகராட்சிக ளின் நிர்வாக இயக்குனரிடம் தெரிவித்து வழிகாட்டுதல் பெற்று உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள னர். எனவே, செவ்வாயன்று நடத்துவ தாக அறிவித்திருந்த ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப் பட்டது.
வரும் 24ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு மற்றும் இ.பி.எப். பிடித்தம் கோரிக்கைகளில் நீதிமன்ற உத்தரவுப்ப டியும், அரசாணைப்படியும் மாநக ராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் வழங்கிட தாமதம் ஏற்பட்டால் ஜூன் 25 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருப்பூர் மாவட்ட ஊரக, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தெரி வித்தார்.