திருப்பூர், ஜூன் 5- திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க வலியுறுத்தி ஜூன் 11 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக சிஐடியு அறிவித்திருந்த நிலையில், புதனன்று பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், அடுத்தகட்ட பேச் சுவார்த்தை ஜூன் 10 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கம் சிஐடியு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக ளில் வேலை செய்யும் தினக் கூலி மற் றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டு நர்கள் மற்றும் டிபிசி ஊழியர்க ளுக்கு அரசாணை 2டி எண் 62 ன் படி தினசரி ஊதியம் கணக்கிட்டு வழங் கிட 2023 செப்டம்பர் 11 ல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவுப்படி ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கவும், தொழிலாளர்க ளிடம் பிடித்தம் செய்யப்படும் இபிஎப் மற்றும் இஎஸ்ஐ தொகையு டன் ஒப்பந்த நிறுவனங்களின் பங் குத்தொகைகளையும் சேர்த்து முறையாக செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்கு நர் 2023 அக்டோபர் 27 இல் உத்தர விட்டுள்ளார். எனினும் உயர்நீதி மன்ற உத்தரவு மற்றும் நகராட்சி நிர் வாக இயக்குநர் உத்தரவு அடிப்ப டையில் தினக்கூலி ஒப்பந்த ஊழி யர்களுக்கு இதுவரை ஊதியம் கணக்கிட்டு வழங்கவில்லை.
இபிஎப் மற்றும் இஎஸ்ஐயும் ஒப் பந்த நிறுவனங்களின் பங்கு தொகையுடன் முறையாக செலுத்த வில்லை.
இது குறித்து சிஐடியு சார்பில் கடந்த 2023 நவம்பர் 2 மற்றும் 2024 ஜனவரி 18 ஆகிய தேதிகளில் திருப் பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத் தில் உள்ள ஆறு நகராட்சிகளின் ஆணையாளர்களிடம் நேரில் கடி தம் கொடுத்தும் வலியுறுத்தப்பட் டது. அரசாணைப்படி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தின சரி ஊதியம் ரூபாய் 562, குடிநீர் பணி யாளர்களுக்கு மற்றும் ஓட்டுநர்க ளுக்கு ரூபாய் 638, நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தின சரி ஊதியம் ரூபாய் 638, குடிநீர் பணி யாளர்களுக்கு மற்றும் ஓட்டுநர்க ளுக்கு ரூபாய் 715, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தின சரி ஊதியம் ரூபாய் 753, குடிநீர் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்க ளுக்கு ரூபாய் 792 கணக்கிட்டு வழங்க வேண்டும்.
ஆனால் மேற் கண்ட ஊதியம் வழங்காமல் மிக வும் குறைவாகவே வழங்கப்படு கிறது. இதைதொடர்ந்து, தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட் டப்படி ஊதியம் வழங்க வலியு றுத்தி ஜூன் 11ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற் றும் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக சிஐடியு சார்பில் அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதனன்று உதவி ஆணையர் பிரேமா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் சுமுக தீர்வு ஏற்படாததால் ஜூன் 10 ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சிஐடியு மாவட்டத் தலைவர் பழனிச் சாமி, மாவட்டச் செயலாளர் கே.ரங் கராஜ், நிர்வாகி வையாபுரி ஜெகநா தன், பார்த்திபன், மனோகரன் வேல் முருகன் மற்றும் பூண்டி நகர மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.