districts

img

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 1- பாலஸ்தீனத்தின் மீது காட்டு மிராண்டித்தனமான இனப்படு கொலையை நிகழ்த்தி வரும் இஸ்  ரேல் அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சர்வதேச சட்டங்களை காலில் போட்டு மிதித்து காட்டு மிராண்டித்தனமான போரை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராகவும், போரை உடனடியாக நிறுத்தவும், பாலஸ்  தீன மக்களின் சுயாட்சி சுதந்திர உரி மையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபால் தலைமை ஏற்றார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எ.சகீலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராஜகோபால், சி.மூர்த்தி,  கே.ரங்கராஜ், ஆர்.குமார், ச.நந்த கோபால் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், கட்சி அணியினர் திரளானோர் பங்கேற்றனர். மெழுகு வர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

;