திருநெல்வேலி, செப்.25- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் காரண மாக பல்வேறு இடங்களில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக மணிமுத்தாறு-கல்லி டைக்குறிச்சியை இணைக் கும் ஜமீன் சிங்கம்பட்டி பகு தியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப் பட்டது. அதனை தொடர்ந்து பழைய பாலத்தை உடைக் கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் மாற்று பாதைக்காக அந்த பகுதி யில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதில் நீர் செல்வதற்காக குழாய் ஒன் றினை வைத்துவிட்டு அதன் மேல் மணல் மூட்டைகளை வைத்துள்ளதாகவும், தற் போது அந்த பகுதியில் நீர் வரத்து அதிகரித்து மண்ண ரிப்பு ஏற்பட்டதால் தற்காலிக பாலம் முற்றிலும் துண்டிக் கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வரு கின்றனர். இதன் காரணமாக மணி முத்தாறு ஜமீன் சிங்கம்பட்டி யில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள னர். இப்பகுதியில் உள்ள சிறப்பு காவல் படையின ரும், பள்ளி செல்லும் குழந் தைகளும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, தற்காலிக பாலத்தை தரமாக அமைத்து, புதிய பாலம் வேலையையும் தாமதமின்றி முடிக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.