திருநெல்வேலி, ஜூன் 7- தென் மேற்கு பருவக்காற்று விரைவில் துவங்க உள்ள நிலையில் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் முக்கிய ஆலோ சனைகள் நடத்தி வருகின்றனர்
. அந்தவகையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளிலும் உயர் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு களப் பணியாளர்கள், காற்றாலை பாரமரிப்பு பணியாளர்கள் உள்ளிட் டோருக்கு உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், இளநிலை மின் பொறியாளர்கள் முக்கிய அறிவுரை கள், ஆலோசனை கள் வழங்கி வருகின்றனர். அதன்படி சங்கரன்கோவில் அருகே மலை யான்குளம் உபமின் நிலையத்தில் மின் வாரிய செயற்பொறியா ளர் பாலசுப்பிர மணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட் டத்தில் தென்மேற்கு பருவக் காற்று விரைவில் துவங்க இருப்ப தால் காற்றாலை மின் உற்பத்தியை அதிக ரிப்பது சம்பந்தமாகவும், காற்றாலை மின் பாதையில் இயற்கை இடர்பாடுகள் காரண மாக மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் கள், உதவி மின் பொறியா ளர்கள், இளநிலை மின் பொறியாளர்கள், பணியா ளர்கள் மற்றும் காற்றாலை பராமரிப்பு பணியாளர் கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.