திருநெல்வேலி,மே 20 - பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஹோ ட்டல் முன்பு திங்கட்கிழமை பட்டியலின வாலிபர் ஒரு வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகை குளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜன். இவர் திங்கட்கிழ மை மதியம் பாளையங் கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக வந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் தீபக் ராஜனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து அங்கிருந்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்து, மோப்பநாய் உதவியுடன் அந்தப் பகுதியில் சோத னை நடத்தினர்.
மேலும் சம்பவத்தை அறிந்த தீபக் ராஜனின் உறவினர்கள் அங்கு கூடினர். இதனை யடுத்து தீபக் ராஜனின் உடல் கூறாய்வுக்காக பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வரு கின்றனர். படுகொலை செய் யப்பட்ட தீபக் ராஜன், பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என கூறப்படுகிறது.