சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கும்பகோணம், மே 31- கும்பகோணத்தில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து மாற்றத்தை அமல் படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் கும்பகோணத்தைச் சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், பிரதான கோவில்கள் என புகழ் பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் உள்ளது. ஆன்மீக தலமாக விளங்கும் கும்ப கோணத்துக்கு, தமிழ்நாடு மட்டு மின்றி பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சாலை போக்கு வரத்து வசதியாக இருப்பதால், கும்பகோணத்திலிருந்து பல்வேறு ஊருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங் கள் இயக்கப்படுகின்றன. வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்ப தால், கும்பகோணம் பகுதி எந்நேர மும் பரபரப்பாக காணப்படும். இதனால் கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வாக னங்கள் சென்று கொண்டே இருக்கும், முக்கிய சாலை சந்திப்பு களில் வாகன ஓட்டிகள் விதிமுறை களை பின்பற்றுவதில்லை. இத னால் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, கும்பகோ ணத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அதன்படி போக்கு வரத்து மாற்றங்களையொட்டி ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் செல்லக் கூடிய பாதைகள் குறித்து அறிவிக்கப் பட்டு 3 மாதங்கள் தொடர்ந்து ஒத்திகை நடைபெற்றது. இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து, கும்பகோணம் காந்தி பூங்கா, நால்ரோடு உச்சிப் பிள்ளை யார்கோவில், மகாமக குளம், நாகேஸ்வரன் கோவில் வீதியில் என பல்வேறு இடங்களில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்தனர். போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வராமலே, அனைத்து வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை பின்பற்றியதால் கும்பகோணம் மாநகராட்சியின் போக்குவரத்து பயண நேரம் குறைந்தது. தற்போது இந்த மாற்றம் ஒத்திகை நிகழ்ச்சியோடு நின்று விட்டது. போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வராததால், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற் றுவதில்லை. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் போக்குவரத்து மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.