districts

img

நூறுநாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

தஞ்சாவூர், மே.13 -  தஞ்சாவூர் மாவட்டம் , பூதலூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக, மாற்றுத்திற னாளிகளுக்கு நூறு நாள் வேலை கேட்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஒரத்தூர் ஆர்.பூசைமணி தலைமையில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் முன்னிலையில், பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அறிவானந்தமிடம் திங்களன்று கோரிக்கை மனு வழங்கினர்.   இதில், பூதலூர் ஒன்றியம் ஒரத்தூர், மாரனேரி, மேகளத்தூர், பவனமங்கலம், செய்யாமங்கலம், செங்கிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இருந்து 20 பெண்கள் உள்பட 44 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 

;