districts

img

திருவாரூரில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி

திருவாரூர்,மே 13- திருவாரூர் மாவட்டம்,குடவாசல் வட்டம், மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) / மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி.ப்ரியங்கா, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவரும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்கிட வேண்டும் என தெரிவித்து மேல் படிப்பு தொடர வாய்ப்புகள் மற்றும் கல்விக் கடன் பெற்றிட வழிவகைகள் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுவாமி தயானந்தர கலை- அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.ஜி.சீனிவாசன், கல்லூரி முதல்வர் வி.ஹேமா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

;