திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கம் சார்பில் செவ்வா யன்று திருச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் வைர வளவன், மாவட்டச் செயலாளர் ஆமோஸ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். நீட் தேர்வு குளறு படிகளை சுட்டிக் காட்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர் சங்கத்தினர் முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி னர். போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றதால் சாலையில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். சிலர் தபால் அலுவலகம் முன் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி, தபால் அலுவலகம் உள்ளே நுழைய முயன்ற னர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் அவர்களை தடுத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.