districts

img

இலங்கை கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை,  மே 30-  இலங்கை கவிஞர் மஞ்சுளா மரியம் எழுதிய ‘கவிதைச் சுடருக்குள் மகம்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவிற்கு மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். நூலின் முதல் பிரதியை மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் வெளியிட, மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா பெற்றுக்கொண்டார். நூலை அறிமுகம் செய்து மாவட்டச் செயலளார் எம்.ஸ்டாலின் சரவணன் பேசினார். மாநில துணைச் செயலாளர் ஸ்ரீரசா சிறப்புரையாற்றினார். நூல் குறித்து பதிப்பாளர் எஸ்.கவிவர்மன் பேசினார். கவிஞர்கள் எஸ்.இளங்கோ, மு.கீதா, சு.கவிபாலா, சீ.சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலாசிரியர் மஞ்சுளா மரியம் ஏற்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் சு.பீர்முகமது வரவேற்க, சாமி கிரீஷ் நன்றி கூறினார். துரை.அரிபாஸ்கர், மைதிலி கஸ்தூரிரங்கன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

;