districts

அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்

திருவாரூர்,  ஜூலை 26 -

    தமிழ்நாடு அடிமனை பய னாளிகள், குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு அமைப் பின் மாநிலத் தலைவர் இரா. செல்வம் தலைமை வகித் தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் பேசினார்.

   அப்போது அவர், “கோ வில், மடம், அறக்கட்டளை கட்டுப்பாட்டிலுள்ள இடங்க ளில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்கள், குத்தகை சாகுபடியாளர்கள் சமீப நாட்களாக மிகுந்த  நெருக்கடிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். பயனாளி களின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், வாழ்வாதா ரங்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு விவசாய சங்கத் தின் துணை அமைப்பாக தமிழ்நாடு அடிமனை பய னாளிகள், குத்தகை விவசா யிகள் பாதுகாப்பு சங்கம் செயல்பட்டு வருகிறது.  

    இந்த அமைப்பின் வாயி லாக கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளோம். 2023  ஆக.16 முதல் 24 வரை, மாநி லத்தில் உள்ள அனைத்து  சட்டமன்ற உறுப்பினர்களை யும் நேரில் சந்தித்து, பயனா ளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள்  மனுவாக வழங்கப்படும். செப்டம்பர் 3-வது வாரத்தில் தமிழ் நாடு அறநிலையத் துறை யின் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்  அலுவலகம் முன்பு கோரிக் கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெறும்” என தெரிவித்தார்.

   கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் மாவட்டச் செயலாளர் ஜி.துரைராஜ், மாநிலக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி மற்றும் மாநில, மாவட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.