districts

img

ரோல் பால் உலகக் கோப்பை போட்டி: திருச்சி பயிற்சி முகாமிற்கு இடம் தேர்வு

திருச்சிராப்பள்ளி, மே 18 - 7 ஆவது ரோல் பால் உலக கோப் பைக்கான போட்டி அடுத்த ஆண்டு கென்யாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி தேர்வு செய்யப் பட உள்ளது. இதையடுத்து இந்த போட்டிக்கு 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கான பயிற்சி முகாம் இந்தியாவில் 4 இடங்களில் நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி மதுரை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் பயிற்சி முகாமிற்கான இடம் தேர்வு நடந்து வருகிறது.  இந்நிலையில் திருச்சி மாவட்டம் கே.கே.நகரில் உள்ள சாய் ஜி ரோல் மால் மைதானத்தை தேர்வு செய்ய ரோல் பால் ஃபெடரேஷன் தலைவர் தபன் ஆச்சார்யா, சர்வதேச செயலா ளர் ராஜ் தபாடி ஆகியோர், மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ் தலை மையில் அந்த மைதானத்தை வெள்ளி யன்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது தேசிய அளவில் மற்றும்  பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தென் னிந்திய செயலாளர் சுப்ரமணியன், மாநில துணைத் தலைவர்கள் பிரேம் நாத், சரவணன், மாநில செயற்குழு உறுப் பினர் மணிகண்டன், பயிற்சியாளர் காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.