districts

img

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடுக!

பெரம்பலூர், ஜூன் 10 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி திங்களன்று பெரம்பலூர் துறை மங்கலத்திலுள்ள கோட்டப் பொறியா ளர் அலுவலகம் முன் கருப்புக் கொடி யேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.பழனிசாமி, கோட்ட  துணைத் தலைவர்கள் கே.கருணாநிதி,  பி.மதியழகன், இணைச் செயலாளர் கள் அ.ராஜா, சி.காட்டுராஜா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கோட்டச் செய லாளர் சி.சுப்ரணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எம்.கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் எஸ்.மகேந்திரன் நிறைவுரை ஆற்றினார்.  மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்து பணிகளை துவக்கி உள்ள தால், 3,500-க்கும் மேற்பட்ட சாலைப்  பணியாளர் மற்றும் சாலை ஆய்வாளர்  பணியிடம் ஒழிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே ஆணையம் அமைக்கும்  முடிவை கைவிட வேண்டும். நெடுஞ் சாலை பராமரிப்பு பணிகளில் கிராமப் புற இளைஞர்களுக்கு வேலை வழங்க  வேண்டும்.  சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் சீரமைப்பு என்ற பெயரில் ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு பணி  மேற்கொண்டு, நிரந்தரப் பணியிடங் களை ஒழிக்கும் போக்கை கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்களின், ஒட்டுமொத்த முதுநிலைப் பட்டியலில் கடந்த 15 ஆண்டு காலமாக முறை கேடு செய்து, பதவி உயர்வு வழங்கி விதி மீறலில் ஈடுபடும் நிர்வாக முதன்மை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத சாலைப் பணியாளர் ஊழியர்க ளுக்குரிய ஊதிய மாற்றம் ரூ.52 ஆயிரம்  மற்றும் ரூ.20 ஆயிரம், தர ஊதியம் ரூ.1, 900 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டப் பொருளாளர் பி.சுப்ரமணியன் நன்றி கூறினார்.