கும்பகோணம்,ஜூன் 8- கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட சோலையப்பன் தெருவில் சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகள் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளால் சாலையில் மண் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பல தெருக்களைச் சுற்றி செல்கின்றனர். எனவே பாதாள சாக்கடை குழாய் மற்றும் ஆழ்நுழைவு கிணறுகள் சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.