districts

சாலையை புதுப்பித்துத் தரக் கோரி போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 10 -

    குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ள சாலையை புதுப்பித்துத் தரக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி அடப்பன்வயல். இங்குள்ள  சிங்கமுத்து அய்யனார் கோயிலிலிருந்து சமத்துவபுரம் செல்லும் நகராட்சி  சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையை புதுப்பிக்க அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  

    இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், புதிய சாலை அமைக்க வலியுறுத்தி திங்களன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் ஒரு வாரத்திற்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்  டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

;