தஞ்சாவூர், ஜூன் 12- விடுபட்ட தகுதியுள்ள மீனவர் களுக்கு, ஆய்வு செய்து தடைக்கால நிவாரணம் விடுபடாமல் வழங்கப்படும் என சமாதான பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று நடைபெறவிருந்த சாலை மறி யல் போராட்டம் கைவிடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் சுமார் 500 மீன வர்களுக்கு தமிழ்நாடு அரசின் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8,000 வழங்கப்படவில்லை. இதையடுத்து, விடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, ஜூன் 12 (புதன் கிழமை) காலை பேராவூரணி அருகே உள்ள செந்தலைவயல் கிழக்கு கடற் கரைச் சாலையில், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மீனவர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சமாதானப் பேச்சுவார்த்தை இந்நிலையில் பேராவூரணி வட்டாட் சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அ. தெய்வானை தலைமையில், செவ்வாய்க் கிழமை மாலை சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன், சேதுபாவா சத்திரம் காவல் உதவி ஆய்வாளர், கடலோரக் காவல்படை உதவி ஆய்வா ளர், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கள், பட்டுக்கோட்டை வருவாய் ஆய்வா ளர், பெருமகளூர் கிராம நிர்வாக அலுவ லர் ஆகியோர் அரசுத் தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேது பாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வழக்குரைஞர் கருப்பையன், பி.பெரியண்ணன், ஏ. சகாப்தீன், வி.ஆர்.கே. செந்தில் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம்-சிஐடியு வலியுறுத்தல் இந்த பேச்சுவார்த்தையில், “விடு பட்ட மீனவர்கள் குடும்பங்கள் அனைவ ருக்கும் தடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும். மீனவர்கள் அல்லாத பிற நபர்கள் நிவாரணம் பெற்று வரு வதை ஆய்வு செய்து நிறுத்த வேண்டும். தகுதியான மீனவர்கள் அனைவருக் கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. மீன்வளத்துறை மீன்வளத்துறை அதிகாரி கூறுகை யில், “4,937 விண்ணப்பங்கள் பெறப் பட்டு 4,427 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 510 பேரில், 145 பேர்களுக்கு இரண்டாவது கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 365 பேருக்கு மட்டும் ஆவணங்கள் பொருந் தாததாலும், பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின்கீழ் உதவி தொகை பெற்று வருவதாலும், நிவார ணத் தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிவாரணம் கிடைக்காத 365 மீனவர்களுக்கும் நிவா ரணம் கிடைப்பதில் உள்ள குறைபாடு களை சரி செய்து உடனடியாக வழங்கப் படும்” என உறுதி அளித்தனர். வட்டாட்சியர் பின்னர் வட்டாட்சியர் கூறுகையில், “விடுபட்ட 365 மீனவர்களின் விவரங் களை ஆய்வு செய்து 15 தினங்களுக் குள் நிவாரணம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். இதையடுத்து ஜூன் 12 (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கை விடப்பட்டது.