தஞ்சாவூர், ஜூன்.20 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவா சத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில், முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மானிய விலையில் தக்கைப்பூண்டு வழங்கும் விழா பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நா.அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார வேளாண் அலுவலர் ராணி பங்கேற்றுப் பேசினார். சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சாந்தி பேசினார். நிகழ்வுகளில் திமுக பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வைரவன் (குருவிக்கரம்பை),ராம்பிரசாத் (சொக்கநாதபுரம்), ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்நம்பி, விவசாயிகள் கலந்து கொண்டனர்.