தஞ்சாவூர், ஜூன் 2- கலைஞர் கருணாநிதிக்கு சிறந்த கவிஞர், சிந்தனையாளர் போன்ற வற்றைவிட, சமூக நீதி என்ற மிகப் பெரிய பார்வை இருந்தது என்றார் தமிழ் நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யம் அருகேயுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தஞ்சா வூர் தமிழிசை மன்றம், தஞ்சை தமிழ் அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை மாலை கருணாநிதி நூற்றாண்டு நிறைவுப் பெருவிழா நடைபெற்றது. அப்போது அவர் மேலும் பேசி யதாவது: கலைஞர் கருணாநிதி, தான் வாழ்ந்த காலத்தில் ஏறக்குறைய 3.50 லட்சம் பக்கங்களை எழுதிக் குவித்தார். மிகப் பெரிய சிந்தனையாளரான அவர், மாபெரும் பேச்சாளராகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கை சொல்கிற பாடம் என்ன என்பதை தமிழக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற் காக இந்த நூற்றாண்டு விழா நடத்தப் படுகிறது. முதல்வராக இருந்த கருணாநிதி சிறந்த கதை ஆசிரியர், கவிஞர், இலக்கியச் சிந்தனையாளர் போன்ற வற்றை விட, அவருக்கு சமூக நீதி என்கிற மிகப்பெரிய பார்வை இருந்தது. தமிழக முதல்வராக 5 முறை பதவி யேற்ற அவர், ஏறக்குறைய 60 ஆண்டு கள் சட்டப்பேரவையில் இருந்தார். எந்தத் திட்டத்தை திட்டமிட்டாலும், எந்தவொரு பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனை வந்தாலும் நாம் எடுக்கிற எந்த முயற்சியும் சமூக நீதிப் பார்வை இல்லாவிட்டால், அது ஓட்டைக் குடத்தில் ஊற்றிய நீராக இருக்கும் எனக் கூறினார் கருணாநிதி. அதுதான் மற்ற அரசியல் தலைவர்களுக்கும், கரு ணாநிதிக்கும் உள்ள வேறுபாடு. தமிழகம் என்பது சமூக நீதி பார்வை யுடன் வளர்த்தெடுக்கப்பட்ட அற்புத மான மாநிலம். இதில் கலைஞர் கரு ணாநிதியின் பங்கு மகத்தானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். விழாவுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் மு. இளமுருகன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் மக்க ளவை உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந் திரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பின ருமான எம்.எச். ஜவாஹிருல்லா, திராவி டர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத் தூர் தா.செ.மணி ஆகியோர் பேசினர். சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே. ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி, கௌரா பதிப்பகக் குழுமத் தலைவர் கௌரா ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முனைவர் இரா.குண சேகரன் வரவேற்றார். முனைவர் வி.தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.