districts

img

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் குளிர்சாதன வசதி காத்திருப்பு அறை திறப்பு

தஞ்சாவூர், ஜூன் 10- தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.21.17  கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதில், குளிர்சாதன வசதி யுடன் கூடிய காத்திருப்போர் அறை கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, இந்த அறையை திருச்சி கோட்ட ரயில்வே  மேலாளர் எம்.எஸ். அன்பழகன் ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்தார். முற்றிலும் குளி ரூட்டப்பட்ட இந்த அறையில் பயணிகள் வசதி யாக ஓய்வு எடுக்கும் விதமாக அதிநவீன இருக்கைகள், ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறைகள், பயணிகளின் உடைமை களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பாது காப்பு அறை, சிற்றுண்டி உள்ளிட்ட உயர்தர  சுகாதார வசதிகள் உள்ளன. இந்த அறையில் பயணிகள் காத்திருக்க  ஒரு மணி நேரத்துக்கு ரூ.30-ம், உடைமை களைப் பாதுகாக்க ரூ.30-ம் கட்டணம் தற்காலி கமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே  அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், காவிரி டெல்டா ரயில்  பயணிகள் சங்கச் செயலர் வெ.ஜீவக்குமார், பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம், “திருச்சி-பாலக்காடு ரயிலை தஞ்சாவூர் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சா வூரிலிருந்து திருச்சிக்கும், கும்பகோணத்துக் கும் பகல் நேரத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளித்தனர்.