தூத்துக்குடி, மே 29- கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் 4ஆவது நாள் ஆட்டத்தில் கர்நாடகா, புதுதில்லி, பெங்களூரு, கோவிவ்பட்டி அணிகள் வெற்றி பெற்றன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வரு கிறது. இதில் 4ஆவது நாள் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சரக்கு சேவைவரி, சென்ட்ரல் எக்சைஸ் அணியும், கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதியதில் 3-2 என்ற கோல் கணக்கில் கர்நாடகா அணி வென்றது. மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்ரியேஷன் கிளப் அணியும், புதுதில்லி இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் அணியும் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வென்றது. பின்னர் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் சென்னை ரயில் பெட்டி தொழிற் சாலை அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதியதில் 6- 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வென்றது. 3 ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும், புதுதில்லி மத்திய செயலக அணியும் மோதின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.