மயிலாடுதுறை, மே 29 - மயிலாடுதுறை அருகே யுள்ள மன்னம்பந்தல் ஊராட் சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை யொட்டி, திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது தலைமையில் நடைபெற்றது. இந்த நூலகத்தில் டாக்டர் கலைஞரின் காலத்தால் அழியா அழியாத காவியங்க ளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், கலைஞரின் கடிதங்கள் உள்ளிட்ட ஏராள மான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூல கத்தை திமுக மாவட்டச் செய லாளர் நிவேதா எம்.முரு கன், திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலா ளர் இளையராஜா ஆகி யோர் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக திறந்து வைத்த னர். நிகழ்ச்சியில் மயிலாடுது றையை அடுத்த பல்லவ ராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும், நரிக் குறவர் சமுதாய மாண வர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 9 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் வித மாக அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து நூலகத்தின் உள்ளே சென்ற நரிக்குறவ மாணவர்கள் புத்தகங்களை எடுத்து படித்தனர். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞான வேலன், செல்வமணி, மயி லாடுதுறை நகர் மன்ற தலை வர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.