தஞ்சாவூர், ஜூலை 8-
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை புதிதாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் எம்.இந்துமதி கூறு கையில், “108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்துகள் உள்ளிட்ட அவசர கால தருணங்க ளில் இதன் சேவை இன்றியமையாததாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வரு கிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் திருச் சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் தினமும் மருத்துவ உதவிகள் பெற்று பயனடைந்து வரு கின்றனர்.
இந்நிலையில், அவ்வப்போது விபத்துகள் மற்றும் அவசர கால நேரங்களில் 108 ஆம்பு லன்ஸ் சேவையை பெறுவதற்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, செருவா விடுதியை மையமாகக் கொண்டு 108 ஆம்பு லன்ஸ் சேவையை திருச்சிற்றம்பலம் பகுதி மக்கள் பயனடையும் வகையில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை யும், சுகாதாரத் துறை அதிகாரிகளையும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள் கிறோம்” என்றார்.