districts

img

சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டக்குழு புதிய அலுவலக கட்டிடத்திற்கு நிதியளிப்பு

மயிலாடுதுறை, செப்.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட பேரவைக் கூட்டம்  கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவா சன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற் றது. கேணிக்கரை கிங் பேலஸில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  ஜி.ஸ்டாலின், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், ப. மாரியப்பன், சி.விஜயகாந்த், ஏ.வி.சிங்கா ரவேலன், ஜி.வெண்ணிலா மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலா ளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். கட்சியின் மாவட்டக் குழு புதிய அலுவல கம் கட்டுவதற்கான ஆலோசனைகள், நிதி சேர்ப்பு, கட்டுமானப் பணிகளில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது. பின்னர், பேரவையில் உறுப் பினர்கள் ஒட்டு மொத்தமாக தங்களின் குடும்பத்தின் சார்பாக ரூ.9,52,050-ஐ தருவதாக உறுதியளித்தனர். புதிய அலுவ லக கட்டுமான கமிட்டியின் தலைவராக டி.கணேசன், செயலாளராக வ.பழனிவேலு, பொருளாளராக ஆர்.இராமானுஜம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.  முதற்கட்டமாக அளிக்கப்பட்ட ரூ.52,050 நிதியை மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் அலுவலக கட்டுமான கமிட்டி  செயலாளர் வ.பழனிவேலு-விடம் அளித்தார்.

;