districts

img

எம்.சாண்ட், பி.சாண்ட்,ஜல்லிக்கற்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்திடுக!

கரூர்.மே 13- எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கட்டுமானத்தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.  கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன த்தின் திருச்சி மண்டல பயிற்சி முகாம்  திங்கள்கிழமையன்று கரூரில்  நடைபெற்றது. சிஐடியு மாநிலப் பொரு ளாளர் மாலதி சிட்டிபாபு, மாநிலச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  கட்டுமான சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.குமார் ஆகியோர் உரையாற்றினர்.   கரூர் மாவட்டத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை செங்குத்தாக உயர்த்தப் பட்டு வருகிறது. மாட்டு வண்டிகளில் கூட மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதித்திருப்பதால் மணலுக்கு மாற்றாக கட்டுமான வேலைகளுக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பி.சாண்ட், எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை உயர்வால் தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் மிகக் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை நம்பி தொழில் செய்பவர் களும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, ஏற்கன வே வீடு கட்டும் ஒப்பந்தம் மேற்கொ ண்டவர்கள் அன்றைக்கு இருந்த விலை அடிப்படையில் ஒப்பந்தம் செய்த பின்னணியில், தற்போது விலை ஏற்றம் காரணமாக வீட்டு உரிமை யாளர்களுடன் முரண்பட்டு நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலைகளை, எவ்வித கட்டுப்பாடுமின்றி உயர்த்தக்கூடிய கல்குவாரி உரிமையாளர்களின் நடவடிக்கையை முறைப் படுத்திடவும், இத்தொழிலை நம்பியுள்ள அனைவரையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறை வேற்றப்பட்டன.

;