districts

img

மழை, வெள்ளத்தால் வேலையிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குக!

திருத்துறைப்பூண்டி, டிச.7 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேலை யிழந்து உள்ள மீனவர்க ளுக்கு, மழை வெள்ள நிவார ணமாக கேரளா-பாண்டிச் சேரி மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் குடும்பம் ஒன்றுக்கு தலா  ரூ.6 ஆயிரம் வழங்க வேண் டும். பிற மாவட்டங்களை போல திருவாரூர் மாவட்டத் தில் இருக்கக் கூடிய மீன வர்களுக்கு பண்ணை குட்டை அமைப்பதற்கு மானி யத்துடன் கூடிய கடன் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி மீன் மற்றும் இதர பொருள் விற்பனையாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு கோ ரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.செல்வ துரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் எம்.பி.கே.பாண்டியன், மாவட்ட பொருளாளர் தனுஷ்கோடி, மாவட்ட துணை செயலா ளர் முருகானந்தம், மாவட்ட  குழு உறுப்பினர் ராமச்சந்தி ரன், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, ஒன்றிய செயலா ளர் கே.பழனிச்சாமி, மாவட்ட  குழு, ஒன்றிய குழு உறுப்பி னர்கள், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.சர வணன், நகர குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கிளை செயலாளர் அருணாச்சலம், மூத்த தோழர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;