பெரம்பலூர்/திருவாரூர், ஜூன் 2 - உலக ஓட்டுநர் தினம் ஜூன் 1 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம் பலூர் மாவட்டத்தில் சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பாக புதிய பேருந்து நிலை யம் அருகே ஓட்டுநர் தினம் கொண்டா டப்பட்டது. ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் பேசினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் ஆட்டோ நிலையம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தம், பழைய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தம், தனலட்சுமி ஆட்டோ நிறுத்தம், சத்திரமனை ஆட்டோ நிறுத்தம் ஆகிய நிறுத்தங்களில் ஓட்டுநர் தின ஸ்டிக்கர் ஒட்டி உறுதிமொழி ஏற்றனர். இதில் சிஐடியு ஆட்டோ சங்க மாவட் டச் செயலாளர் அ.ரெங் கநாதன், மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் தீனதயாளன், செயற் குழு உறுப்பினர் பாபு மற்றும் நிலைய உறுப் பினர்கள் பங்கேற்ற னர். திருவாரூர் திருவாரூர் அருகே வாழவாய்க்கல் ரவுண் டானா அன்னை தெரசா ஆட்டோ நிறுத்தம் அருகே சனிக்கிழமை மாலை, கொடியேற்றி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் டி.முருகையன் கொடியேற்றி, உறுதி மொழி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் இரா.மாலதி, கே.பி.ஜோதிபாசு கலந்து கொண்டனர்.