districts

img

சிஐடியு ஆட்டோ, கார் ஓட்டுநர் சங்க கிளை அமைப்பு

மயிலாடுதுறை, ஜூன் 3- மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ் வரன் கோயில் அருகேயுள்ள புங்கனூர்  கிராமத்தில் ஆட்டோ, கார் ஓட்டுநர் சங்கம் (சிஐடியு) கிளை அமைப்பு பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி  ஆட்டோ நிலைய தலைவர் எம்.சவுகத் அலி தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர் ஹலீக்குல் ஜமான் வர வேற்றுப் பேசினார். புதிய கிளை அமைப்பை சாலை போக்குவரத்து மாவட்டத் தலைவர் எம்.ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் புல வேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் என்.எம்.கே.கமாலுதீன் ஜுனைதா பேகம் மற்றும் கிராம நாட்டாமை, ஜமாத் தாரர்கள் வாழ்த்திப் பேசினர். சங்க பெயர் பலகையை சாலை  போக்குவரத்து மாவட்டச் செயலாளர் லெ.அந்தோணிசாமி திறந்து வைத் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன் உரையாற்றினார்.  கிளைத் தலைவராக எம்.சவுகத் அலி, செயலாளராக பிஸ்மி ஆர்.ராஜா, பொருளாளராக எம்.அப்துல் ஹலிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;