districts

பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநில அளவில் அரியலூர் 5 ஆவது இடம்

அரியலூர், மே 15- தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  மார்ச் மாதம் நடந்து முடிந்து பிளஸ் 1 தேர்வு முடிவுகள் செவ்வாய்க் கிழமை காலை வெளியிடப் பட்டன. இதில் 94.96 சதவீதம்  பெற்று மாநில அளவில் அரியலூர்  மாவட்டம் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் 92 பள்ளிகளைச் சேர்ந்த 4,218 மாணவர்கள், 4,401  மாணவிகள் என 8,819 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர். இந்த  தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டன. இதில்  3918 மாணவர்கள், 4,267 மாணவிகள் என 8,192 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் 94.96 சதவீதம் பெற்று, மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.  ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அள வில் முதல் இடத்தையும், பிளஸ் 2  பொதுத் தேர்வில் மாநில அளவில் 3  ஆம் இடத்தை அரியலூர் மாவட்டம்  பிடித்துள்ளது. பள்ளிகள் வாரியாக... 54 அரசுப் பள்ளிகளில் இருந்து  2,529 மாணவர்கள், 2,387 மாணவி கள் என மொத்தம் 4,916 பேர் தேர்வு  எழுதினர். இதில் 2,285 மாணவர் கள், 2,265 மாணவிகள் என மொத்தம் 4,550 பேர் தேர்ச்சி பெற்ற னர். அரசுப் பள்ளி தேர்ச்சி சதவீதம்  92.55. 9 அரசு உதவிபெறும் மேல் நிலைப் பள்ளிகளில் பயின்ற 674 மாணவர்கள், 1,332 மாணவிகள் என மொத்தம் 2,006 பேர் தேர்வு  எழுதினர். இதில் 622 மாணவர்கள், 1,321 மாணவிகள் என மொத்தம் 1,943 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு  உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி சத வீதம் 96.86. 2 அரசு ஆதிதிராவிட நல மேல் நிலைப் பள்ளிகளில் பயின்ற 39 மாணவர்கள், 23 மாணவிகள் என மொத்தம் 62 பேர் தேர்வு எழுதினர். இதில் 36 மாணவர்களும், 23 மாணவிகளும் என மொத்தம் 59 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.61. 18 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி களில் பயின்ற 828 மாணவர்கள், 582  மாணவிகள் என மொத்தம் 1,410  பேர் தேர்வு எழுதினர். இதில் 827 மாணவர்கள், 582 மாணவிகள் என  மொத்தம் 1,409 பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். தேர்ச்சி சதவீதம் 99.93. 9 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 148 மாணவர்கள், 77 மாண விகள் என மொத்தம் 225 பேர் தேர்வு  எழுதினர். இதில் 148 மாணவர்கள், 76 மாணவிகள் என மொத்தம் 224 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி  சதவீதம் 99.56 ஆகும். அரியலூர் மாவட்டம் 94.96 சத வீதம் தேர்ச்சி பெற்று மாநில அள வில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் அரசுப் பள்ளி - 18, அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளி - 1, அரசு உதவிபெறும் பள்ளி - 5, மெட்ரிக் பள்ளி - 17, சுயநிதி பள்ளி - 8 என  மொத்தம் 49 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தஞ்சாவூர் 89.07 சதவீதம் தேர்ச்சி பிளஸ் 1 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 89.07 சத வீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 12,815  மாணவர்களும், 14,542 மாணவி களும் என மொத்தம் 27,357 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 10,684  மாணவர்களும், 13, 683 மாணவி களும் என மொத்தம் 24,367 பேர்  தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 89.07 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட நிகழாண்டு 1.02 சத வீதம் குறைவு. இதேபோல, மாநில அளவி லான தேர்ச்சி விகிதப் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 23 ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 27  ஆம் இடத்துக்கு சரிந்துள்ளது. நிக ழாண்டில் மாணவர்கள் 83.37 சத வீதத்தினரும், மாணவிகள் 94.09  சதவீதத்தினரும் தேர்ச்சி அடைந்த னர். வழக்கம்போல மாணவர்களை  விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி  பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில்  93.73 சதவீதம் தேர்ச்சி மாவட்டத்தில் அறிவியல் பிரிவில் 93.73 சதவீதத்தினரும், வணிகவியல் பிரிவில் 82.88 சதவீதத் தினரும், கலைப் பிரிவில் 64.32  சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகள்  83.35 சதவீதம் தேர்ச்சி சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளி களில் 97.04 சதவீதம், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்  சுய நிதிப் பள்ளிகளில் 96.18 சத வீதம், அரசு பகுதி உதவிபெறும் பள்ளிகளில் 95.09 சதவீதம்,  சமூக நலப் பள்ளிகளில் 90.32 சதவீதம், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 87.84 சதவீதம், அரசின் முழு உதவி  பெறும் பள்ளிகளில் 86 சதவீதம்,  அரசுப் பள்ளிகளில் 83.35 சதவீதம், மாநகராட்சிப் பள்ளிகளில் 80.85  சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.