districts

img

வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மின்னல் தாக்கி பலி

அரியலூர், மே.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் செக்கடித் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு(55). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். திங்களன்று  தனது சினை பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.மேய்ச்சல் முடிந்து இரவு நேரத்தில் மாட்டை ஒட்டி வந்து வீட்டில் கட்டுவது  வழக்கம்.இந்நிலையில்  வயலில் மேய்ந்து கொண்டிருந்த சினைப்பசு மாடு மீது இடிமின்னல் தாக்கி யது. இதில் பசுமாடு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. சத்தம் கேட்டு ஓடி பார்த்த போது சினைப் பசுமாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. மின்னல்தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

;