districts

img

திண்டுக்கல் தொகுதி மாபெரும் வெற்றி திமுக, சிபிஎம், இந்தியா கூட்டணியினரின் அயராத உழைப்பிற்கு கிடைத்த பரிசு

சின்னாளபட்டி, ஜூன் 6- திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி யில் திமுக தலைமையிலான இந்தியா கூட்ட ணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் 4 லட்சத்து 43  ஆயிரத்து 821 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் .

வெற்றி பெற்ற சான்றிதழை வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற பின்பு வாக்கு எண்ணும் மைய மான திண்டுக்கல் அண்ணா பொறியியல்  கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களி டம் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்ச ரும், திமுக மாநில துணைப்பொதுச்செய லாளருமான ஐ.பெரியசாமி கூறியதாவது: தென் மாவட்டங்களில் உள்ள தொகுதி களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தோழர் ஆர்.சச்சிதானந்தம் 4 லட்சத்து 43 ஆயிரத்து 821 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

தோழ மைக் கட்சியினர் அனைவருக்கும் நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சிக்கு இந்த வெற்றி எடுத்துக்காட்டாக உள்ளது. இளைஞர் நலன்- விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல், தேனி, ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் சூறா வளி பிரச்சாரம் செய்ததின் பயனாக இந்த  மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இது போல சிபிஎம் கட்சியை சேர்ந்த தலைவர் பிர காஷ் காரத், கே.பாலகிருஷ்ணன், மற்றும்  அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்  தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள்.

அதன் பயன் இந்த வெற்றிக்கனி நம் கையில் கிடைத்துள்ளது. இதுபோல உணவு -உண வுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு  மாவட்ட திமுக செயலாளர் செந்தில்குமார்  தலைமையில் திமுக நிர்வாகிகள் அயராது  உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பரிசு தான் திண்டுக்கல் தொகுதியின் மாபெரும் வெற்றி.  33 வருடங்களாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திமுக கட்சி நிர்வாகிகள் முதன்முறையாக தோழ மைக்கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல்  நட்சத்திரம் சின்னத்தை மக்கள் மனதில் பதிய அவர்கள் செய்த பிரச்சாரம் பாராட்டுக்குறியது.  

திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் வெற்றிபெற்றுள்ள சிபிஎம் கட்சியை சேர்ந்த தோழர் ஆர்.சச்சிதானந்தம் சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். எந்த நேரமும் அவரை நீங்கள் சந்தித்து உங்கள் குறைகளை கூறலாம் . இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான அனைத்து நல்ல உள்ளங்களையும் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக உணவு -உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக  செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பி னருமான  ஐ.பி.செந்தில்குமார், சிபிஎம் மாநி லச் செயற்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, கே.பாலபாரதி, மதுக்கூர் ராம லிங்கம், திமுக மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் ஜெயன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், திண்டுக்  கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலை வர் வழக்கறிஞர் காமாட்சி, திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

;