districts

img

பெண் குழந்தைகளை பாதுகாக்க கல்வி நிலையங்களில் உள்புகார் கமிட்டி அமைக்க மாதர் சங்கம் வலியுறுத்தல் 

பெண் குழந்தைகளை பாதுகாக்க கல்வி நிலையங்களில் உள்புகார் கமிட்டி அமைக்க மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் சாய் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் தொடர்ந்து மாணவிகள் மீதான பாலியல் சீண்டல் வன்முறை நடந்துவருகிறது. இதனை தடுக்க பள்ளி கல்லூரிகளில் உள்புகார் கமிட்டி அமைக்க வேண்டும். பெண்குழந்தைகளை பாதுகாக்கவும் பாலியல் சீண்டலை தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதி கிராமங்களில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு கூலிவேலைக்காக சென்ற பழங்குடியினர்களில் இரண்டு பேர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்தவேண்டும். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் .

தருமபுரி மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;