தஞ்சாவூர், ஜூன்.6 - உலக சுற்றுச்சூழல் தினத்தி னை முன்னிட்டு, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கத்தின் “பசுமை தஞ்சாவூர் - 2024” சவால் என்ற முன் னேடுப்பில் மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் மரக் கன்று நடும் விழா நடை பெற்றது.
இவ்விழாவில், மருது பாண்டியர் கல்வி நிறுவனங்க ளின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நட்டு விழாவைத் துவக்கி வைத்தார்.
மருதுபாண்டியர் கல்லூரி யின் முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்கராஜ் ஆகியோர் முன்னி லையில், மருதுபாண்டியர் கல்லூரியை சார்ந்த மாண வர்கள், பேராசிரியர்கள், அலு வலக மேலாளர் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் இணைந்து 250 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் அமைத்து மற்றும் அதனை பராமரிப்பதற்காக சொட்டு நீர் பாசன வசதி செய் தனர். முன்னதாக, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ந.சந் தோஷ்குமார் வரவேற்றார்.