தஞ்சாவூர், ஜூன் 9- தஞ்சாவூரில் குடிநீர் விநியோகம் செய்யா ததைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தஞ்சாவூர் மாநகராட்சி 20 ஆவது வார்டுக் குட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாப சிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குழாய் மூலம் வீடுகளுக்கு தினமும் காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து 20-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணன், மாநகராட்சி அதி காரிகளுக்கு புகார் தெரிவித்தார். ஆனாலும், குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல், சனிக்கிழமை காலையும் குடிநீர் வராததால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், மாமன்ற உறுப்பினர் சரவ ணன் ஆகியோர் தலைமையில் சீனிவாசபுரம் கிரி சாலையில் காலிக் குடங்களுடன் திரண்டனர்.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், “எங்கள் பகுதி யில் வீடுகளுக்கு நீல நிற குழாய் பொருத்திய பிறகு குடிநீர் விநியோகம் சீராக இல்லை.
சில நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது ஒரு வாரமாக சுத்த மாக தண்ணீர் வரவில்லை. எனவே, எங்கள் பகுதியில் உள்ள நீல நிற குழாயை நீக்கிவிட்டு பழைய முறையில் குழாய் பொருத்த வேண்டும். தினமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் இல்லாமல் சிரமப் பட்டு வருகிறோம்” என்றனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள், “தற்போது லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறோம். உடனே பிரச்சனையை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்து தரு கிறோம்” என்றனர். இதனை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.