districts

img

பெண்ணுரிமை போராளி நினைவு தினம்: புதுச்சேரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரி, மே 30- பெண்ணுரிமை போராளி மைதிலி சிவ ராமன் நினைவு தினத்தில் போதை இல்லா புதுச்சேரி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரும், தலித் மற்றும்  பழங்குடியினர் மக்களுக்காக  போராடி மறைந்த  தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தின அஞ்சலி கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் வியாழக்கிழமை (மே 30) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின்  மாநில தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் சுதா சுந்தரராமன்,  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் வழக்கறிஞர் சரவணன் ஆகி யோர் பங்கேற்று போதை இல்லா புதுச்சேரியை உருவாக்குவதற்கு பெண்க ளின் கடமைகள்  குறித்து பேசினார். மாதர் சங்க மாநில செயலாளர் இளவரசி, நிர்வாகிகள் உமா சாந்தி, சத்யா, ஜானகி, கோமதி, மாரிமுத்து, மலர்விழி உட்பட திரளான பெண்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக மைதிலி சிவ ராமன் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு பெண்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தீர்மானம்  புதுச்சேரியில் அதிகரித்துள்ள கஞ்சா, போதை வஸ்துகளை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை இல்லா புதுச்சேரியாக மாற்று வதற்கான இயக்கத்தில் அனைத்து பகுதி பெண்களும் பங்கேற்க வேண்டும் என்பது  தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.