districts

img

நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் குரங்கு

கடலூர், ஜூலை 3-

    கடலூர் அடுத்த குடிகாடு பகுதியில் ஒரு வீட்டில் நாய்க்குட்டி வளர்த்து வருகின்றனர். அந்த நாய்க்குட்டி, பார்ப்பதற்கு ஒரு குரங்கு தினமும் குடிகாடு கிராமத்திற்கு வருகிறது. பின்னர் சாலையில் சுற்றித் திரியும் அந்த நாய்க்குட்டி குரங்கு லாவகமாக தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்கிறது. பின்னர் அந்த நாய் குட்டியுடன் குரங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.

    இது மட்டுமின்றி குரங்கு தனது குட்டி குரங்குகளுக்கு எப்படி பேன் பார்க்கும் அதேபோல் அந்த குட்டி நாய்க்கு பேன் பார்ப்பது போல் பாவனை செய்கிறது.

   மேலும் உயரமான கட்டிடத்தில் நாய்க்குட்டி விளையாடுவது மட்டுமின்றி குரங்குடன் எந்தவித சண்டையும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆனந்தமாகவும், வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    தினமும் இந்த வீட்டு பகுதிக்கு வரும் குரங்கு, நாய் குட்டியை தூக்கிக்கொண்டு தனக்கு பிடித்தமான இடத்தில் வைத்துக் கொண்டு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.

    குரங்கு ஒன்று நாய்க்குட்டி தினமும் தூக்கி சென்று விளையாடி விட்டு மீண்டும் அதே பகுதியில் இறக்கி விட்டு செல்கிறது. தற்போது, அது வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.