districts

img

நீர்மோர் வழங்கிய வாலிபர் சங்கம் கிராம பொதுமக்கள் பாராட்டு

திருவள்ளூர், மே 19- திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றி யத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும் தேவந்தவாக்கம் ஆகிய கிளைகளில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறு அன்று (மே19), ஒன்றிய பொருளாளர் வழக்கறிஞர் சி.பிரபு  தலைமையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், மாவட்ட துணைத் தலைவர் சந்துரு, ஒன்றிய செயலாளர் கே.விஜயகாந்த், துணைச் செயலாளர் எஸ்.நல்லரசு, துணைத் தலைவர் எஸ்.கார்த்திக், ஒன்றிய துணை நிர்வாகிகள் முத்துக்குமார், சி.முருகன்.வில்சன் சஞ்சய் குமார்.மோகன். வி.நதியா. சக்தி வேல், அப்பு சீத்தஞ்சேரி பகுதியின் முன்னாள் நிர்வாகிகள் ஆர்.முரளி, கே.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க நீர்மோர் வழங்கிய வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளை மக்கள் வெகுவாக பாராட்டினர்.

;