திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம்,மில்லத் நகர் மற்றும் இறையூர் ஆகிய மூன்று பகுதிகளில் வாலிபர் சங்கம் அமைத்துள்ள நீர் மோர் பந்தல்களை முன்னாள் மாவட்ட செயலாளர்கள் எம்.சிவக்குமார், எ.இலட்சுமணன் மற்றும் மாவட்ட செயலாளர் சி.எம்.பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். வட்டார தலைவர் வடிவேல், செயலாளர் சேதுராமன் துணை நிர்வாகிகள் எம்.முஜாபர் கான்,ஆர்.ரஞ்சித்,கே.ரஞ்சித்குமார் மற்றும் செங்கம் நகர நிர்வாகி எம்.சரவணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.