districts

img

காளியம்மன் கோவிலுக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்

சிதம்பரம், ஜூன் 3- சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள  கிள்ளை தைக்கால்  பகுதியை சேர்ந்த சையது சகா பாய் தலைமையில் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி காளியம்மனுக்கு வாழைப்பழம், மாதுளை பழம், திராட்சை,  பட்டு துணிகள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து சிறப்பு செய்தனர். இதில் சமூக பண்பாட்டாளர் ஈஸ்வர லிங்கம், சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

;