districts

img

இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக நகர செயலாளர். ஜெ.ரவீந்திரன், சிபிஐ (எம்எல்) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மு.தினேஷ்குமார், பாட்டாளி வர்க்க சமரண் அணியின் மாநில அமைப்பாளர்.கே.மணி, மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். ஆசீர், சிபிஐ மாவட்டச் செயலாளர். ஏ.ராஜ்குமார், சிபிஎம்  மாவட்டச் செயலாளர். ப.சு.பாரதி அண்ணா, மமக-வின் மாவட்டச் செயலாளர் யூனிஸ், திமுக நகர செயலாளர் ச.நரேந்திரன், மதிமுக செங்கல்பட்டு நகர செயலாளர். எஸ்.சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.