districts

img

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிறுத்தி வைக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் துவங்கிட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. தாலுகா செயலாளர் வி. மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எஸ். பிரகாஷ், மாவட்டத் தலைவர் பி. கணபதி, மாவட்டச் செயலாளர் கே .கே. வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி .கே. வெங்கடேசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். பிரகலநாதன், மாவட்ட நிர்வாகிகள் ஆர். அண்ணாமலை, எஸ். பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

;