districts

img

அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் போராட்டம் வாபஸ்

சிதம்பரம்,நவ.4- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாய வேளாண் பட்டயப் படிப்பு பயின்ற மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழக தேர்வாணையம் மூலம்  நடைபெற்ற உதவி தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வை இந்திய மாணவர் சங்கம் தலையீட்டு போராட்டத்தின் அடிப்படையில் தேர்வு எழுதினர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திலிருந்து தேர்வில் வெற்றி பெற்ற 150-க்கும் மேற்பட்ட மாணவர்களை வரும் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் தமிழக தேர்வாணையத்தில் நடைபெறும் கலந்தாய்விற்கு அழைக்கப்படவில்லை.  மாறாக கோவை வேளாண் பல்கலைக் கழகம் காந்தி கிராம் பல்கலைக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைத்துள்ளனர். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்காத நிலையில் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த தகவலை  அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட தமிழக தேர்வாணையத்தின் அலுவலர்கள், துறைசார்ந்த அமைச்சரின் கவனத்துக்கொண்டு சென்றார். இதனையடுத்து, நடந்த பேச்சு வார்த்தையில் தேர்வாணைய அலு வலர்கள் மற்றும் உயர்கல்வி, வேளாண்துறை அமைச்சர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்த, மாணவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கொண்டனர்.